நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெறும் - சுதாகர் ரெட்டி பேட்டி

தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு அவர்களின் கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.



முகாமில் தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளிடம் பேசும் பொழுது, வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆகவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.



மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் உட்பட மாநில மண்டல மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...