பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் - முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகளுஃகு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர்களின் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் பூத் கமிட்டி நோட்டுகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.



இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன், இளைஞரணி மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...