கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை - மாமன்ற உறுப்பினர் தலைமையில் சாலைமறியல்

அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று கடை அகற்றப்படும் என காவல்துறை அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் பகுதியில் புதிதாக மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை P.N.புதூர் பகுதியில் புதிதாக திறந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 41-வது மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



கடந்த வருடமே மருதமலை மெயின் ரோடு P.N.புதூர் மயானத்தின் பின்புறம் மதுபானக்கடை வருவதை அறிந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரை அணுகியதால் போராட்டம் நடைபெறும் நேரத்தில் காவல்துறை முன்னிலையில் இட உரிமையாளர் கடை வராது என உறுதிமொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.



ஆனால் இந்த வருடம் (2023) ஆகஸ்ட் மாதம் மீண்டும் கடை திறக்கும் வேலைகள் நடைபெறும் பொழுதில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டு அனைத்து அதிகாரிகளையும் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து புகார் மனுவாக கொடுத்தும், அதிகாரிகளும் கடை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய நிலையில் இன்று மதியம் திடிரென காவல்துறையை குவித்து கடையை திறந்து விட்டதை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...