கோவையில் கறிக்கோழி விற்பனையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி - சென்னை வியபாரி கைது

கொள்முதல் செய்த கறிக்கோழிக்கு தரவேண்டிய ரூ.47 லட்சம் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாக இருந்த செந்தில் மோகன் என்ற கறிக்கோழி வியபாரியை, தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் மோகன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வி எம் சி புரோட்டீன் என்ற பெயரில் கறிக்கோழி விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதற்கான உயிர் கறிக்கோழிகளை கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சிக்கன் என்ற நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவில் இருந்த செந்தில் மோகன் கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யும் கறிக்கோழிக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதை அடுத்து கறிக்கோழி மொத்த விற்பனை மைய மேலாளர் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துமாறு கூறவே திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த செந்தில் மோகனை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கூறி அந்நிறுவன மேலாளர் பாலகுமாரன் என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தலைமறைவான செந்தில் மோகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் மோகன் சென்னையில் இருப்பது தெரிய வந்த நிலையில் சென்னை சென்ற தனிப்படையினர் செந்தில் மோகனை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில்15 நாள் காவலில் செந்தில் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...