காடுகுட்டை பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் - அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு

கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், காடுகுட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் காடுகுட்டை பகுதிக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அனுப்பும் வகையில் 5.16 கொடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீரூந்து நிலையத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த 4ம் தேதி திறந்து வைத்தார்.



கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒண்டிப்புதூர் சேகரிப்பு நிலையம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து நீர்ந்து நிலையம் கட்டப்பட்டு 125 HC திறனுள்ள மோட்டர் பொருத்தப்பட்ட நிலையில், செட்டிபாளையம் பகுதியில் உள்ள காடு குட்டை என்ற பகுதி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மின் இணைப்புகளில் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் சுத்திகரித்த நீரை பம் செய்து குட்டைகளில் நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு பலமுறை விவசாயிகள் கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு மின் இணைப்பு பெறப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் காடு குட்டைக்கு வந்தடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், பாடுகூட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் என தகவல் தெரிவித்த நீர்வளத்துறை அதிகாரிகள், இங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 14 குட்டைகள் பீடம் பள்ளி கிராமத்தில் உள்ள ஒன்பது குட்டைகள் பட்டணம் பகுதியில் உள்ள 4 குட்டைகள் இனமொத்தம் 27 குட்டைகள் நிரம்ப கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் சுமார் 5000 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும் எனவும் நீர்மட்டம் உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...