கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டி

அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பேண்டு வாத்திய போட்டியில், 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கடந்த 1944 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சமூகம் சார்ந்த பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருகிறது.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 22 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் பேண்ட் வாத்திய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான பேண்டு வாத்திய போட்டி அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில் 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை, ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் மூத்த வழக்கறிஞர் ரொட்டேரியன் ஏ கே எஸ் சுந்தர்வடிவேலு துவக்கி வைத்தார்.



போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வண்ண மயமான பேண்டு வாத்திய சீருடை அணிந்தபடி, போட்டியில் தங்கள் இசைத் திறமை, உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நேர்த்தியாக வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.

இதில் நடுவர்களாக பி ஆர் எஸ் பேண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு சிறந்த குழுவினரை தேர்வு செய்தனர். கலப்பு,மற்றும் மாணவர் குழு, மாணவியர் குழு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கலப்பு பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி, மாணவியர் பிரிவில் அவிலா கான்வெண்ட், மாணவர் பிரிவில் லாரன்ஸ் பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.



தொடர்ந்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் சுந்தரவடிவேலு வழங்கி கவுரபடுத்தினார். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் விஜய், செயலாளர் பாலசுப்ரமணியன், சேர்மன் குணசேகரன் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...