விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - மடத்துக்குளத்தில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அறிவுரை

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கூறினார்.


திருப்பூர்: விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் மடத்துக்குளத்தில் நடைப்பெற்ற விளையாட்டு விழாவில் அறிவுரை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஜே எஸ் ஆர் கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜே எஸ் ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவில் ஸ்டாலின் நாகராஜ் அவர்கள் பேசும் பொழுது.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் இந்தியாவில் உயிரிழந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் கூட கொரனாவால் உயிர் இழக்க வில்லை காரணம் விளையாட்டு தான் மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி சாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார் .

விளையாட்டு விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் நாகராஜன் ஏற்றுக்கொண்டார் . பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர்கள ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வலம் வந்தனர்.



மழலையர் குழந்தைகளின் உடற்பயிற்சி, வண்ணமயமான பாராசூட் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் டான்ஸ், சிலம்பம் யோகா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...