குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டும் - கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

நீண்ட்நாட்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


கோவை: குப்பைகளை அகற்றக் கோரியும் தீ வைப்பதை தடுக்க கோரியும் நீலிகோணாம்பாளையம் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்

கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.



இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...