தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளவதற்காக மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


கோவை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகராட்சி 15வது வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள் மற்றும் ஊக்கப்பரிசுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார். முன்னதாக பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 15 வது வார்டு சுப்பிரமணியம் பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகிப்பவர்கள் உள்ளனர்.



அவர்களும் தீபாவளியை கொண்டாடும் விதமாக 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கும் இனிப்புடன் வேஷ்டி சேலை மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பச்சை முத்து முன்னிலை வகித்தார். இதில் RGPRS வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300 கோடி மதிப்பில் துடியலூர், கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து அவர்கள் தலைமையில் பூஜை போடப்பட்டது.

இவ்விழாவில் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மதன், எல்.என்.டி இன்ஜினியர் ராஜராஜன், ஷேக் அப்துல் காதர், நஞ்சுகுட்டி கவுண்டர், செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...