புதுப்பொலிவுடன் நேரு மைதானம் - கோவையில் காணொலி மூலம் போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

கோவையில் புது பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது.


கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

கோவை வஉசி அருகே நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400மீ தூரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் கடந்த 2008-ல் அமைக்கப்பட்டது.

இந்த ஓடுதளம் தற்போது பழுதடைந்து உள்ளது. இந்நிலையில், ஓடுதளம் சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.

தவிர விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதையடுத்து, சிந்தடிக் பாதை அமைக்கும் பணி, நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் நடந்து வந்தது. இதில், தற்போது சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அத்லெடிக் அசோசியேஷன் தலைவர் தேவாரம் துணைத் தலைவர் மோகன் தாஸ், செயலாளர் சி.லதா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் பத்தாம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...