கவுண்டம்பாளையத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிய ஆட்சியர்

கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கவுண்டம்பாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு கிடங்கு வளாகத்தையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மூவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.



பின்னர் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட வளங்கள் அலுவலர் குணசேகரன், வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...