உடுமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி வரும் அவலம் - பாதை அமைத்து தரக்கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை ஈசல்தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவட்டப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகள் வனத்துறை, வருவாய் துறை,தன்னார்வலர்கள் சார்பில் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ஆனால் இன்றளவும் பாதை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி அடைவதற்கு வழிவகை பிறக்கவில்லை. இதனால் பிரசவம்,அவசரகால உதவி, விபத்து, ஏதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற்றால் சிகிச்சைக்கு அடிவாரப் பகுதிக்கு வருவதற்குள் மலைவாழ் மக்கள் மறு ஜென்மம் எடுத்து விடுகின்றனர்.



பாதை வசதி இல்லாததால் உயிரைக் காக்க உயிரை பணயம் வைத்து நோயால் பாதிக்கப்பட்ட நபரை அடர்ந்த வனப்பகுதிக்குள் தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

பின்னர் வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு பாதை வசதி அமைப்பதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்குவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை தேவையான பாதை வசதி பூர்த்தி அடைந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த ஒரு தேவையும் காலத்தே செய்து கொள்ள இயலும். எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...