திருப்பூரில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி

கனமழை காரணமாக பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, அதில் இருந்து தண்ணீர் சாலைகளில் சென்றது. இதனால், சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அளித்துள்ளார்.



இந்த நிலையில் இரவு பெய்த கனமழையின் காரணமாக ரோடுகளின் அனைத்து பகுதிகளும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட தோட்டத்து பாளையம் பகுதியில் மழை நீரின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீரினால் சூழப்பட்டுள்ளது.



அதேபோல பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பியதால் அதிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் சாலைகளின் வருகிறது.



இதனால் அப்பகுதி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதகாரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வளம் பாலம் முழுவதுமே மழை நீரால் மறைந்துள்ளது. மழை நீர் வெள்ளம் போல செல்வதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சாலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி செல்கிறார்கள்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...