கோவையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த அரச மரத்திற்கு மறுவாழ்வு

வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை  நறுக்கி இரண்டு கிரேன், ஒரு ஜேசிபி மூலம் மரத்தை பிடிங்கி எடுத்துச்சென்று மயானத்திற்கு முன்பகுதியில் நடவு செய்தனர்.


கோவை: கோவை தடாகம் சாலை, கணுவாய் அருகே கே.என்.ஜி புதூர் பிரிவு, சத்யம் கிட்னி சென்டர் முன்புறமுள்ள ஒரு பெரிய 30 ஆண்டு பழமையான அரச மரம் ஒன்று சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது.



தகவல் அறிந்த கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதிபெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை நறுக்கி இரண்டு கிரேன் ஒரு ஜேசிபி மூலம் 30 அடி நீளமுள்ள லாரி ஒன்றில் ஏற்றி தடாகம் சாலை வழியாக நான்கு கிலோ மீட்டர் பயணித்து வெங்கிட்டாபுரம் அவிலா கான்வென்ட் முன்புறமுள்ள அம்பேத்கர் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வேலாண்டிபாளையம் மயானத்திற்கு முன்புறம் மாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.



செயல் சமூக செயற்பாட்டுக் களம் முன்னெடுத்த இந்த இயற்கைப் பணியில் வெங்கிட்டாபுரம் வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தோழர்கள் பங்கேற்றார்கள். இதற்கான பணியை செயல் செயற்பாட்டு களத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...