பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வு

பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினர்.

கடந்த தேர்தல் அறிக்கையில் அறவித்தது போல அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

முதல்கட்டமாக சுமார் 1 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்னவர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...