உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - வாகனம் நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை

பஞ்சலிங்க அருவியில் விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்த காரணத்தால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் தற்பொழுது மழை குறைந்த காரணத்தால் கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



தீபாவளியை தொடர் விடுமுறையை முன்னிட்டு பஞ்சலிங்க அருவியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்தனர்.



இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டது எனவே விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



இதேபோல உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள காந்தளூர் பகுதியில் இறைச்சி பாறை அருவியிலும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...