கோவையில் கார் ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 13 கார்கள் எரிந்து நாசம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கார்கள் எரிந்து நாசமாகின.

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியான ஸ்ரீநகர் பகுதியில் சாய்பாபா காலனியை சேர்ந்த வர்கீஸ் என்பவர் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கண்டத் கார் ஒர்க் ஷாப் என்ற பெயரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவர் அதன் கிளையாக கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியான ஸ்ரீ நகர் பமுதியிலும் கார் டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக அங்கு தொழில் செய்து வரும் இவரிடம் 6 பேர் பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ளனர்.



இதனிடையே ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த கார்களில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த தீ விபத்தில் அங்கிருந்த 13 கார்கள் எரிந்த சூழலில் 10 கார்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...