100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கேட்டு கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக துடியலூர் அருகில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாரத்திற்கு அகில இந்திய பொது செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையை வைத்தனர்.

வட்டாரத் தலைவர் பி.டி மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பங்கேற்றவர்கள் மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர் சிவக்குமார் வசந்த் தமிழ்ச்செல்வன். ராமநாகராஜ், சுரேந்திரபாபு செல்வராஜ் சிங்காரம் ராஜேந்திரன், சூர்யா வெள்ளிங்கிரி உட்பட பல கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...