உடுமலை அருகே அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா - ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உடுமலை அடுத்த சித்தக் குட்டை இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உடுமலை கிழக்கு அரிமா சங்கம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து விழாவை நடத்தியது. நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.



வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு அரிமா சங்கத் தலைவர் வக்கீல் ராஜாராம், செயலாளர்கள் விஜயமோகன், ராஜா சந்திரசேகர், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தனியார் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...