தி.மு.க. இளைஞரணி வாகன பேரணி - தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி வரவேற்பு

மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.


திருப்பூர்: தாராபுரம் வந்த திமுக இளைஞரணி வாகன பேரணியில் வந்த திமுக தொண்டர்களை அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார்.

சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி.மு.க. இளைஞரணியினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தாராபுரம் வந்தனர்.



அவர்களுக்கு ஐ.டி.ஐ. கார்னரில் அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர்.



நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் பூங்கொத்து கொடுத்தார். பிறகு மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.



அப்போது மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...