நீலகிரி மாவட்டத்திற்கு அழகிய ஆபத்து.!



நீலகிரி மாவட்டத்திற்கு அழகிய ஆபத்து.!

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் வரப்பிரசாதமாக அமைந்தது நீலகிரி மாவட்டம். மொத்தம் நான்கு ஒன்றியங்கள் மற்றும்  21 பேரூராட்சிகள்  கொண்ட இம்மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் பசுமை. 

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நீலகிரி குறித்து குறிப்பிடப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம் வெகுவாக புனரமைக்கப்பட்டது. அதன் பின்னர், உதகை உலகறிந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றானது. 

மலைக்காடுகள் அதிகமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது அந்நிய விதைகள் அதிக அளவில் பரவி வருகின்றன. இந்த விதைகள் நம் பாரம்பரிய சோலைக் காடுகளை அழித்து, அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருகின்றன. 

நம் நாட்டின் மண் வளத்தை கெடுக்க அண்டை நாடினாரால் திட்டமிட்டு விதைக்கப்பட்ட விதையாக கூறப்படும் சீமை கருவேல மரத்தை பற்றி நாம் அனவரும் அறிந்திருப்போம். இதே போல நீலகிரி மாவட்டத்திலும் ஓர் ஆபத்து விரைவாக பரவி வருகிறது. ஸ்காட்ஸ் ப்ரூம் என்ற ஒருவகை தாவரம் தான் அந்த அழகிய ஆபத்து. சீமை கருவேல மரத்தைப் போல களையெடுக்க வேண்டிய களைச்செடிகளுள் இதுவும் ஒன்று என்கின்றனர் சூழல்வாதிகள்.  




மஞ்சள் நிற பூக்கள், அடர்ந்து பரவும் தன்மை, காண்பவரை கவரும் அழகு இத்தகைய பண்புகளை பெற்றிருக்கும்  ஸ்காட்ஸ் ப்ரூம் செடியின் ஆபத்து குறித்து பலருக்கு தெரிவதில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக தங்க தொடங்கினர். அப்போது அவர்கள் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்த ஒருவகை அலங்காரச்செடி தான் இந்த ஸ்காட்ஸ் ப்ரூம். மாளிகைகளின் வாசல்களில் அழகுக்காக நடப்பட்ட்ட இந்த செடி நாளுக்கு நாள் பரவி இன்று நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளை மிக வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன.

ஆபத்து

இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடி புல் மலைகளில் முளைக்கும் போது அருகில் வேறு எந்த செடி வகைகளும் வளராது. இதனால் புட்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மான் போன்ற உயிரினங்களுக்கு உணவு இல்லாத நிலை ஏற்படுகிறது. 

காட்டிற்கு எவ்வகையிலும் உதவாத இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடிகள் சோலைகளை சிறிது சிறிதாக அளித்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் மழை பொழிவு குறைகிறது. 



aபவானி நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, லக்கடி, மற்றும் அப்பர் பவானி ஆகிய இடங்களில் இந்த செடிகள் அதிகம் பரவியுள்ள காரணத்தால் மழை பொழிவு கணிசமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே சீகை, கற்பூரம், சவுக்கு மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் புல் மலைகளை ஆக்கிரமித்து வந்த வேளையில் வனத்துறை அவற்றை அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில்  இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடி வகைகளும் களையெடுக்கப்பட வேண்டியவையே என்றும், வறட்சி காலத்தில் எந்த தாவரங்கள் வாடும்போதும் இவ்வகை செடிகள் மண்ணில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் என்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...