வால்பாறையில் 1500 பேர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விண்ணப்பம் அளித்த மூன்றாயிரம் பேரில், சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 1500 பேருக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் முகாம் வால்பாறை பகுதியில் நடைபெற்றது. முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்று சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, பழங்குடியினர் சான்றிதழ், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, நத்தம் சிட்டா நகல்,பட்டா உறுதிச் சான்று, ஒருங்கிணைந்த சான்று, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்றிதழ் போன்றவை 1163 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60,000 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் பள்ளி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் வாசுதேவன் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...