தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு

இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கடந்த மாதம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்றைய தினம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9.00 மணி முதல் இன்று காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.



இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார். தாராபுரம் ஊழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். நஞ்சியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...