கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி ஆணையாளருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதி கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி சீர் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பதியில் உப்பு தண்ணீருக்காக தோன்றிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தோன்றிய பள்ளங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இதனையும் கருத்தில் கொண்டு சரி செய்து தருமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...