முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலையில் அன்னதானம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல பெரிய கோட்டை ஊராட்சி அய்யலுமீனாட்சி நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.

பின்னர் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . அப்போது முதியவர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியாக உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

உடுமலை போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கவேல், உடுமலை கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ரத்தினசாமி, கதிர்வேல், முத்துசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வராஜ், பெரியகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் செயலாளர் ,நாகராஜ் மாவட்ட இணை செயலாளர் மகேஷ் குமார், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சீனிவாச பிரபு, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் இளம்பிறை சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...