வால்பாறை ஆழியார் சாலையில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்

சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கார் கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது. இதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் உலாவி வருகிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு வால்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆம்னி காரை பழனிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டு இருந்தார். சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது.

இதில் காரின் கண்ணாடி கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை சாமர்த்தியமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் வால்பாறை வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் ஆழியாறு சாலையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...