உடுமலையில் புகழ்பெற்ற சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்தையா பிள்ளை லே-அவுட் பகுதியில் அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர்கோவில் உள்ளது. கோவிலில் சக்தி விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியர், காலபைரவர், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.



கோவிலில் லட்சுமி நரசிம்மர், லிங்கோத்பவர் புதிதாக பிரதிஷ்டை செய்வது எனவும், புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பணிகள் நிறைவு பெற்ற பின் கும்பாபிஷேக விழா இன்று ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் காலை 9 மணிக்கு மேல் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது.

பின்னர் கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக வைபவமும், பின்னர் சக்தி விநாயகர், முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், கோதரிசனம், தீபாராதனை, ரக்ஷாபந்தன விசர்ஜனம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...