உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்கள்.

உடன் நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் சரவணராஜன், உதவி ஆணையர்கள் பிரேம் ஆனந்த், செந்தில்குமரன், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், நெடுஞ்சாலைத்துறையின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...