தொண்டாமுத்தூரில் விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் - விவசாயிகள் புகார்

தீத்திபாளையத்தில் மயில்சாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், சின்ன வெங்காய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: தொண்டாமுத்தூரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல வகையில் கையாண்டும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. கோவை தீத்திபாளையம் மயில்சாமி கவுண்டர் என்பவர் தோட்டத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சின்ன வெங்காய நடவு காட்டில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



60 நாட்கள் ஆன சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டாமுத்தூர் விவசாயிகள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...