காங்கேயத்தில் மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீது காவல் ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர்கள் புகார்

இரவோடு இரவாக மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீதும், ஜேசிபி வண்டியின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சென்னிப்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம். மேலும் இந்த இடத்தில் இயங்கி வந்த தியேட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கவில்லை. அதனால் அந்த தியேட்டர் இருந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனம் முழுவதுமாக இடித்துவிட்டு அந்த இடத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை அந்த தனியாருக்கு சொந்தமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் துவக்க விழா நடைபெற இருக்கும் வேளையில் நேற்று நள்ளிரவு ஜேசிபி இயந்திரத்தை வைத்து அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தை அடியோடு பிடுங்கி விட்டு அந்த இடத்தில் மரம் இருந்ததற்கான ஆதாரங்களையும் அளித்து விட்டனர் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இன்று காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

மேலும் மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீதும், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மரத்தை வெட்டி இடத்திலேயே மீண்டும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி அந்த நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

மரத்தை வெட்டுவதற்கு முன்பே சில சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று தெரிவித்து வந்ததையும் மீறி அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரவோடு இரவாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியது இப்பகுதி பொதுமக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் வரும் பயணிகள் இந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றுதான் பேருந்துக்கு காத்திருந்தனர். தற்போது இந்த மரம் இல்லாமல் வெய்யிலில் நிற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...