சீரான குடிநீர் வழங்காத கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொங்காளியூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பேரூராட்சி அதிகாரிகள் இன்று மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை நேரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தேங்காய் பாறை பகுதிக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை 6.30 மணி அளவில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோட்டூர் பொங்காளியூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பேரூராட்சி அதிகாரிகள் இன்று மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை நேரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...