தாராபுரம் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழாவை நகர திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் அண்ணா சிலை அருகே திமுக கட்சி சின்னம் பதிக்கப்பட்ட 71 கிலோ கேக் வெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.



இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை வழங்கி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதற்கு முன்னதாக அண்ணா சிலை முன்பு 70 அடி திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் தவச்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன்,தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அபிராமி கார்த்தி, ஹைடெக் அன்பழகன், சாஜிதா பானு, ராஜேந்திரன், முத்துலட்சுமி, பிலோமினா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...