ஊதியூர் பெட்ரோல் பங்க் நிறுத்தம் அருகே பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம்

பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது உள்ளே இருந்து, படிக்கட்டிற்கு வந்த மாணவன் திடீரெனெ நிலை தடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த குள்ளம்பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஊதியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியின் மகன் அபிஷேக்குமார் வயது 16. இந்த சிறுவன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி வேலை முடிந்தவுடன் காங்கேயம் பேருந்து பணிமனைக்கு சொந்தமான K5 என்ற பேருந்தில் குள்ளம் பாளையத்தில் இருந்து ஊதியூர் பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் இறங்கி வீடு செல்வது வழக்கம்.

அதே போல் இன்றும் அந்த பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது படிக்கட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திடீரெனெ படிக்கட்டில் நிலை தடுமாறி சாலை விழுந்துள்ளார். உடனே சகமாணவர்கள் சத்தமிடவே பேருந்தை நிறுத்தி பார்க்கையில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் மாணவனும் துடிக்க அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நின்ற பின்னரே படிக்கட்டு பகுதிக்கு வரவேண்டும் அதற்க்கு முன்னாள் படிக்கட்டிற்கு வந்தால் கை தவறியோ அல்லது படிக்கட்டுகள் வலுக்கிவிட்டு இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அதே போல் பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை படிக்கட்டுக்களில் நிற்பதை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...