பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி அடையச் செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் ஆலோசணை கூட்டத்தில் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான முப்பெரும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

நிகழ்வுகளில் கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம், வாழ்த்துரங்கம் நடைபெற்றது. மேலும் ஆலோசணை கூட்டத்தில் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் (சிறப்பாசியர்கள்) பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்ற, வெற்றி அடையச் செய்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் 12 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வரும் ஓரே கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கௌதமன், மாநில செயலாளர் யசோதா, மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில அமைப்பு செயலாளர் குமரேசன், மாவட்ட திருப்பூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தமிழக முழுவதும் இருந்து மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...