கோவையில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நாளையும், நாளை மறுநாளும் 35 டிகிரி வெப்பநிலை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.4) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை 34 டிகிரி ஆக இருந்த வெப்பம் இன்று 35 டிகிரி வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் இதே வெப்பநிலை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 7,8 ஆகிய தேதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...