கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-20, 27, 32 ஆகியவற்றில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை இன்று (மார்ச்.4) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு 2024-க்கு பயிற்சி வகுப்புகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-03 மற்றும் 33-ல் ரூ-52.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பறையை பொதுமக்ள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார். மேலும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...