பெரியநாயக்கன்பாளையத்தில் குரங்குகள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்ககோரி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதையில் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது. இந்த குரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனவிலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச்.4) கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.

அவை நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகளின் பொருட்கள் வீணாவுதுடன், வியாபாரமும் நஷ்டத்துக்கு உள்ளாகிறது.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...