குனியமுத்தூரில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

குனியமுத்துார், கு.வடமதுரை மற்றும் கோவை மாநகர் மின் வாரிய அலுவலகங்களில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்கிறார். எனவே இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (மாநகர், பொறுப்பு) வசந்தமுரளி பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் (மாநகர்) இன்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...