உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு - சாலையில் கொட்டப்படும் அவலம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கண்ணமநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர், பாப்பான்குளம், மருள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் தக்காளி பழங்களை உடுமலை தினசரி சந்தையில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் மறையூர், மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் தேவையை பொருத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தற்சமயம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.



இதனால் போக்குவரத்து செலவு, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் அடைவதைவிட சாலை ஓரத்தில் வீசி எறிவது சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து தற்சமயம் உடுமலை பழனிசாலையில் பல இடங்களில் கொட்டி வருகின்றனர்.

எனவே உடுமலை பகுதி தக்காளி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தக்காளி சந்தை உருவாக்கி இருப்பு வைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...