கோவை ராமநாதபுரத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் ரெய்டு

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் அனீஸ். இவர் ராமநாதபுரம் பகுதியில் கியா கார் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது வீட்டிற்கு இன்று காலை E.D. அதிகாரிகள் திடீரென வந்தனர்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அனீஸ் கோவையில் உள்ள பிரபல கார் விற்பனையாளர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரது வீட்டில் E.D. அதிகாரிகளின் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகின்றன.

E.D. அதிகாரிகளின் அதிரடி ரெயிடானது, ஐந்து மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் புகார் குறித்த விவரங்கள் பின்னர் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரைடில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...