வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தின விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர்.



இவ்விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மகளிர்கள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினர்.



தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வால்பாறையில் நீண்ட நாளாக செயல்பட்டு வந்த மக்கும் குப்பை, மக்கா குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.



பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு பிரித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, அதை உரமாக தயாரித்து தமிழக வேளாண் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உரங்களில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து பின்பு 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ, 50 கிலோவாக பேக் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வீதாம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



அதை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் விற்பனை செய்து துவக்கி வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொறியாளர் கோகிலா செந்தில்குமார், வீரபாகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...