கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மைய கட்டுமானப் பணி தொடக்கம்

தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இன்று (09.03.2024) தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுமானப் பணியினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து, கட்டுமானப் பணியினை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



முன்னதாக, மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம்பாஷா, குணசேகரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சரண்யா, சபரிராஜ், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...