உலக வரைபடங்களை அடையாளப்படுத்தும் கோவையை சேர்ந்த 2 வயது சிறுவன் – 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை

உலக வரைபடங்கள், கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்திய 2 வயது சிறுவன் சாய் சித்தார்த்துக்கு அமெரிக்கன் உலக சாதனை புத்தகம், வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ராஜலட்சுமி தம்பதி. இவர்களுடைய குழந்தை சாய் சித்தார்த்(2 வயது). மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நிலையில் பல்வேறு விதமான புத்தகங்கள், இந்திய மற்றும் உலக வரைபடங்கள், தேசிய கொடிகள் என பொது அறிவு குறித்த கேள்விகளுக்கு தயாராகும் வகையில் வீட்டில் வாங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் இவற்றை அடையாளம் காண்பதில் மழலை சிறுவன் சாய் சித்தார்த்தின் ஆர்வத்தை கண்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிறுவனுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.



இதில் அனைவரும் வியக்கும் வகையில் சிறுவன் சாய் சித்தார்த் உலக வரைபடங்கள் மற்றும் கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனையை பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரபடுத்தி உள்ளது.

இதே போல பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த இரண்டு வயது குழந்தை சாய் சித்தார்த்தை பல்வேறு தரப்பினரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...