குருக்கம்பாளையத்தில் 10 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருக்கம்பாளைய ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் குருக்கம்பாளையத்தில் ஸ்ரீ பட்டாசு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் சுந்தரம் என்பவரின் தாத்தா தர்மகத்தாவாக 3 தலைமுறையாக கோவிலில் படைக்கலம் எடுத்து பூஜை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் கோவில் நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை. அப்போது ஊரைச் சேர்ந்த அம்மாசை என்பவர் கவனித்து வந்தார். தற்போது அம்மாசை கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்த முயற்சித்து வருகிறார்.



தற்போது 3 தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களையும் அவருக்களுக்கு ஆதரவாக இருந்த 10 குடும்பத்தினரையும் அம்மாசை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவிட்டால் ஓட்டு அட்டையை திரும்ப தர போதவாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...