கோவை கரடிமடை பகுதியில் பத்து நாட்களாக உலா வரும் ஒற்றை காட்டு யானை - இரண்டு பெண்களை தாக்கி அட்டகாசம்

நேற்று இரவு கரடிமடை பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களை தூக்கி வீசிவிட்டு அரிசியை ஒற்றை காட்டு யானை சாப்பிட்டு சென்றுள்ளது. காயம் அடைந்த அந்த இரண்டு பெண்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், ஆதாரத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை அடர் வனத்தை நோக்கி நடை கட்டும்.



இந்த நிலையிலே, கோடை காலத்துக்கு முன்னதாகவே வறட்சி ஆரம்பமான நிலையில் யானைகள் நீர், உணவுக்காக ஊர் பகுதிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. பத்து நாட்களுக்கு மேலாக ஒற்றைக் காட்டு யானை, மாலை நேரத்தில் ஏழு மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வந்து, எந்தவித அச்சுறுத்தும் இல்லாமல், அனைத்து வீடுகளிலும் உள்ள அரிசி, பருப்புகளை சூறையாடுவதும், மாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவைகளை தின்னும் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையிலே, நேற்று இரவு கரடிமடை பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்மணிகளை தாக்கி அரிசியை சாப்பிட்டுள்ளது. காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வனத்துறையினர் தனிப்படை அமைத்து யானையை இடம்பெயர செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை தெரிவித்தனர் . பெண்களை காயப்படுத்திய யானை காட்சி வெளியாகியிருக்கின்றன.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...