தாராபுரம் அருகே ஆச்சியூரில் ஆடு திருடிய தொழிலாளி கைது – போலீசார் நடவடிக்கை

மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் பட்டியை திறந்தபோது, ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில், பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஆச்சியூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு நேற்று காலையில் பட்டியை திறந்தார். அப்போது ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியதாக பழனி தாலுகா பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...