பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கேயத்தில் தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தொடர்பான மண்டல அலுவலர்கள் கண்காணிப்பு குறித்தும், பறக்கும் படை அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வழிவகைகள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வது, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் ராம்குமார், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, அலுவலக மேலாளர் அருணா, நில வருவாய் ஆய்வாளர்கள் விதுர் வேந்தன், சுந்தரி, சந்திரகலா, காங்கேயம் நகராட்சி ஆணையாளர் கனிராஜ், முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் மற்றும் காவல்துறையினர்,, வருவாய்த் துறையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...