கோவையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு..!

ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைத்து, சரிபார்க்கப்ப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது.


கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று (மார்ச்.20) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 



10 தொகுதிகளுக்கு தேவையான 3719 வாக்கு பதிவு இயந்திரங்கள், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4026 விவி பேட் இயந்திரங்கள் என 11,464 வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. 



ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கப்ப்படுகிறது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. 

அதே போல, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...