கோவை திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் - செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

கோவை திமுக கிழக்கு மண்டலம்  52 ஆவது வட்டம் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், எம்.பி  வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.


கோவை: கோவை திமுக கிழக்கு மண்டலம்52 ஆவது வட்டம் சார்பாக நேற்று (மார்ச் 24) செயல் வீரர்கள் கூட்டம், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள எஸ் கண்ணன் நினைவரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்விவாதித்தனர்.



இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் வட்டச் செயலாளர் நாராயணன், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமி (சிபிஐ), கல்யாணசுந்தரம் (சிபிஎம்), பாண்டியன் (சிபிஎம்), சிவக்குமார் (காங்கிரஸ்), மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் 52 வது வட்டக் கழக செயல் வீரர்கள், பாக முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...