கோவையில் ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழக முதல்வர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் - அமைச்சர் நேரில் ஆய்வு..!

வரும் 13 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள திமுக பிரச்சார கூட்டம், எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நடைபெறவுள்ள நிலையில், இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக, வரும் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதற்காக, கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தளபதி தியாகு, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பட்டணம் செல்வகுமார், மதுரை பாலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...